banner_04

நன்றி


இலங்கை. மலையகம். கந்தலோயா.

1 தோட்டத் தொழிலாளியின் 1 நாள் சம்பளம் 3 EUR மட்டுமே. 1 மாதத்தில 14 நாட்கள் மட்டுமே வேலை. 1 மாதத்தில் மிகுதி 16-17 நாட்களுக்கு வருமானம் இல்லை. இவர்களின் வருமானம் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே போதாமையால் பல குடும்பங்களில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகள் உழைப்பதற்குச் செல்லுகின்றனர் அல்லது வீட்டில் இருக்கின்றனர். வறுமையில் இருக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியைச் சாத்தியமாக்குவதற்கும் இதன் மூலம் வருமானம் போதாத பெற்றோருக்கு ஏற்படும் மேலதிக பொருளாதாரச் சுமையில் சிறிதளவைக்குறைப்பதற்கும், உங்கள் நிதி உதவுகிறது.

250 பிள்ளைகள் படிக்கின்ற கந்தலோயாத் தோட்டத்திலுள்ள பாடசாலைக்கு மொத்தமாக 22 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பது 8 ஆசிரியர்கள் மட்டுமே. தமிழ்- சிங்கள எல்லைப் பகுதியில்,
நகரில் இருந்து நீண்ட தொலைவில், போக்குவரத்து வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருக்கின்ற இத் தோட்டப் பாடசாலைக்கு சிரமங்கள் கருதி ஆசிரியர்கள் வருவதில்லை. வருபவர்களும் நிலைத்திருப்பதில்லை. இந்த நிலைமையில் 12ஆம் வகுப்பு வரை வகுப்புக்களைக் கொண்ட இப் பாடசாலையானது எதிர்கொள்ளும் சிரமத்தினை ஓரளவாவது தவிர்க்கும் பொருட்டு உங்களால்
வழங்கப்படுகின்ற நிதி உதவி மூலமாகக் குறித்த பாடங்கள் தெரிந்த, ஆனால் வேலைவாய்ப்பற்று இருக்கின்ற இளைஞர்கள் ஆசிரியர்களாகக் கந்தலோயாப் பாடசாலைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள்.

 

இலங்கை. கிழக்கு மாகாணம்.

யுத்தத்தினால்/ வேறு காரணங்களால் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய இடங்களில் வாழுகின்ற பிள்ளைகள் தாம் வாழும் சூழலின் பாதிப்பினால் அடிப்படை அறிவில் தம் வயதையொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து நிற்க முடியாதவர்களாயுள்ளார்கள். இவர்களுக்கு எழுதவும், வாசிக்கவுமான பரீட்சயத்தை ஏற்படுத்துதல் என்பது மெல்லக் கற்றல் செயற்பாட்டின் அடிப்படையாகும். இச் செயற்பாட்டை முன்னெடுப்பவர்களாக சமூக, பொருளாதார நிலைமையினால் தமது உயர்தரக் கற்றலைத் தாண்டித் தொடர முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும்
இளைஞர்களை உங்கள் நிதி மூலம் வெளியுலகுக்கு அழைத்து வந்துள்ளோம்.

இந்தச் செயற்பாடுகள் தொடருவதும் வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதும் உங்களைப் போல் நண்பர்கள் தரும் நிதி மூலமே சாத்தியம். தொடர்ந்தும் உதவுங்கள். உங்கள் நண்பர்களையும் இணைத்துவிடுங்கள்.

 

உங்கள்
உதவி.நண்பர்கள்