banner_04

யுத்தம்


war

விடியற்காலையில்
யன்னலைத் திறந்தபோது
இரத்த வெள்ளம்
வழிந்தோடியது.

நான் பார்க்க விரும்பியதோ
அதிகாலை
சூரியனைத்தான்.

கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.

நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.

என்ன நடக்கிறது?
அடுத்தவரிடம் கேட்டேன்.

யுத்தம்.
பதில் வந்தது.

வெளியே போக
முடியவில்லை.

– விஜிகலா

(வகுப்பு 9, யோகசுவாமி மகளிர் இல்லம்)

10/2004