banner_04

குழந்தைகளின் சொர்க்கம்


childrenofheaven-bubblesவேறு பாடசாலை ஆசிரியர்கள் வந்து தொலைக்காட்சியில் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நட த்தப்போவதாக எங்கள் ஆசிரியர் கூறினார். நாங்கள் பெரும் ஆவலோடு இருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் ஆசிரியர்கள் வருகை தந்து தொலைக்காட்சியில் படத்தைப் போட்டனர். நாங்கள் அனைவரும் மிக அமைதியாகப் பார்த்தோம்.

அப் படத்தில் பாடசாலை செல்லும் 2 பிள்ளைகள் பற்றியே கூறப்பட்டடிருந்தது. நாங்கள் நினைத்ததை விட மிகவும் நன்றாக இருந்தது. ஒரு பாதணியை இருவரும் பாவிக்கின்றனர். பெண்பிள்ளை வீட்டு வேலை செய்துகொண்டும், ஆண்பிள்ளை தன் தந்தைக்கு உதவி செய்தும் அந்த கஸ்ரமான குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு கல்வி கற்பதை நினைத்தால் மிகவும் கவலையாய் உள்ளது. எவ்வளவோ முயன்றும் ஒரு பாதணியை வாங்க முடியவில்லை. தமிழ் சினிமா திரைப்படத்தில் கதாநாயகன் வெல்லுவார் ஆனால் இந்தப் படத்தில் தோல்வியே எடுத்துக் காட்டப்படுகின்றது.

தமிழ் சினிமா பார்ப்பதைவிட இவ்வாறான படங்களை பார்ப்பதே மேலானது. கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சிறந்ததாகும். பார்த்தால் எங்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம். எந்தவொரு பிரச்சனை வந்தாலும் எவ்வாறான தேவைகள் ஏற்பட்டாலும் கல்வியைத் தொடர்ந்து கற்க வேண்டும். ஆகவே கல்வியைக் கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

– கோசலாதேவி
(மட்டக்களப்பு/இலங்கை)
2012

 

 

அந்த சிறுவர்களின் குடும்பமானது மிகவூம் கஸ்ரப்பட்ட குடும்பமாகும். அதில் அச் சிறுமி வீட்டு வேலையைச் செய்து விட்டுதான் பாடசாலைக்கு செல்கிறாள். அச் சிறுவனானவன் தனது தந்தையுடன் வெளி நகருக்கு சென்று வேலைகளை மேற்கொள்கின்றான். அதிலும் அச் சிறுவர்கள் இருவரும் ஒரு பாதணிகளை வைத்துக் கொண்டே மிகவும் கஸ்ர நிலையில் அப்பாதணிகளை மாற்றி மாற்றி பாடசாலைக்கு அணிந்து கொண்டு செல்கின்றனர். இதனால் அச்சிறுவன் பாடசாலைக்கு செல்லும் நேரம் தாமதம் அடைகின்றது. இன்னிலையில் அச் சிறுவன் ஒரு விளம்பரத்தில் பாதணிக்கான ஓட்ட பந்தயத்தை அறிந்து அதில் அவன் பாதணியை பெற்றுக் கொள்வதற்காக போட்டியில் கலந்து கொண்டு பெரும் சிரமங்கள் மத்தியில் வெற்றி அடைகிறான்.

ஆனால் அச் சிறுவனுக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் மட்டுமே வழங்கப்பட்டது. அவன் எண்ணிய பாதணி கொடுக்கப்படவில்லை. போட்டியில் கலந்து கொண்டதால் இருந்த பாதணியும் கிழிந்து போய்விட்டது. இதனை நினைத்து சிறுவன் கவலை அடைகின்றான்.

அதனைப் பார்க்கும் போது மிகவூம் வேதனையாக இருக்கின்றது. அத்தோடு இதனைப்பார்த்து கொண்டு இருந்த போது மனதுக்குள் ஏதோ ஒரு சஞ்சலமாய் இருந்தது. அத்தோடு அச் சிறுவனின் எதிர்பார்ப்பு தோல்வி அடைகின்றது.அச் சிறுவர்கள் பாதணி இருந்திருந்தால் பாடசாலைக்கு நன்றாக சென்று படித்திருப்பார்கள். இக் கஸ்ர நிலையிலும் அவர்களின் கற்கும் ஆர்வம் என்பன உணரப்படுகின்றது. இதன் மூலம் எனக்கு எப்படி கஸ்ரப்பட்டாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என் மனதில் தோன்றுகின்றது.

நாம் எவ்வாறு கஸ்ர நிலையில் இருந்தாலும் எம் மனதை தளர விடாமல் எச் சவால்களிலும் வெற்றி அடைந்து எனது இலட்சியத்தை அடைவேன் என்பது உறுதியாக எனக்கு உள்ளது.

– சி.யோகா
(மட்டக்களப்பு/இலங்கை)
2012