யுத்தம்
விடியற்காலையில்
யன்னலைத் திறந்தபோது
இரத்த வெள்ளம்
வழிந்தோடியது.
நான் பார்க்க விரும்பியதோ
அதிகாலை
சூரியனைத்தான்.
கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.
நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.
என்ன நடக்கிறது?
அடுத்தவரிடம் கேட்டேன்.
யுத்தம்.
பதில் வந்தது.
வெளியே போக
முடியவில்லை.
– விஜிகலா
(வகுப்பு 9, யோகசுவாமி மகளிர் இல்லம்)
10/2004
«குழந்தைகளின் சொர்க்கம்விடியல் 2013»